12, பிப்ரவரி, 2012
இந்த பஜன் மிகவும் அற்புதமாக இருக்கின்றது இல்லையா? 12 வது நூற்றாண்டின் கர்நாடகாவை
ச்சேர்ந்த ஞானி பசவண்ணா அவர்களின் கவிதையைக் குறிப்பிட்டு குருஜி கேட்கிறார். நம் உடல்
மனம் நம்முடைய செல்வங்கள் அனைத்துமே இறைவனுக்குச் சொந்தமானவை என்று அது சொல்கிறது .பிறகு,கவலை எதற்கு? ஒரு உண்மையான பக்தன் எதற்குமே கவலைப் படாமல்
இருப்பது தான். வாழ்வில் நல்ல நேரம், கெட்ட நேரம் இரண்டும் இருக்கும். ஆனால் நீங்கள்
இரண்டிலும் சம நிலையோடு இருக்க வேண்டும்.
இருப்பது தான். வாழ்வில் நல்ல நேரம், கெட்ட நேரம் இரண்டும் இருக்கும். ஆனால் நீங்கள்
இரண்டிலும் சம நிலையோடு இருக்க வேண்டும்.
பக்தியின் உச்ச நிலையின் காரணமாக கண்களில் கண்ணீர் வழிந்தால் நம் மனம் தூய்மை
யடைகிறது.ஞானம் நம் புத்தியை தூய்மைப்படுத்துகிறது.தானம் நம் செல்வத்தை தூய்மை
படுத்துகிறது. யோகமும் ஆயுர்வேதமும் நம் உடலைத் தூய்மைப்படுத்துகிறது.சேவை நம்
கர்மாவைத் தூய்மைப்படுத்துகிறது.தியானம் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது.
புத்தியினைத் தூய்மைப்படுத்த ஞானத்தைத் தேடுங்கள். ஞானம் என்பது என்ன? அனைத்துமே
நிலையற்றது.நான்(என்னும் ஆத்மா ) நிகழும் எல்லாவற்றிற்கும் வெறும் சாட்சி,விழிப்புணர்வே
ஞானம். என் மனம் என்னுடைய ஆத்மாவுடன் (self) இணையட்டும்.மனம் என்பது கடலலை.
தான் (உள்ளுயிர்த்தமை) கடல். நாம் தொடர்ந்து நம் மனத்தை நம்முள்ளே செலுத்தவேண்டும்.
அப்பொழுது நம் கவலைகள் எல்லாம் மறைந்து நம் மனம் வெறுமையாவதை உணரலாம்.
நான் யார் என்று ஆராயுங்கள்.அன்றாட வாழ்க்கையின் பிரச்சினைகள் எப்போதும் இருக்கும்.
ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி எதோ ஒன்று நடக்கும் எல்லாவற்றிற்கும் சாட்சியாக
இருக்கின்றது.அதில் திரும்ப திரும்ப மனதைச் செலுத்துங்கள். எல்லா நேரமும் செய்யத் தேவை
யில்லை. உறக்கத்திலிருந்து விழித்த உடனேயும் உறங்கச் செல்வதற்கு முன்னேயும் அரை நிமிஷம் இவ்வாறு செய்யுங்கள். நான் யார் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.இந்த
உலகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை என்று உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள்.
இருக்கின்றது.அதில் திரும்ப திரும்ப மனதைச் செலுத்துங்கள். எல்லா நேரமும் செய்யத் தேவை
யில்லை. உறக்கத்திலிருந்து விழித்த உடனேயும் உறங்கச் செல்வதற்கு முன்னேயும் அரை நிமிஷம் இவ்வாறு செய்யுங்கள். நான் யார் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.இந்த
உலகத்திலிருந்து எனக்கு எதுவும் தேவையில்லை என்று உங்களுக்கே சொல்லிக்கொள்ளுங்கள்.
நீங்கள்(ஆன்மீகத்தில்) முன்னேறிச் செல்லும் போது நீங்கள் இந்த உலகத்தை சேர்ந்தவர்
இல்லை என்று உணர்வீர்கள். உங்கள் சொந்த இடம் வேறு நீங்கள் இங்கே எதோ கிராமத்திற்கு
வந்திருக்கிறீர்கள் என்று தோன்றும். உங்கள் வீடு வேறு எங்கோ இருக்கிறது. நீங்கள் இங்கே
வந்திருக்கிறீர்கள் என்று தோன்றும். உங்கள் வீடு வேறு எங்கோ இருக்கிறது. நீங்கள் இங்கே
வெறும் பயணம் செய்ய வந்திருக்கிறீர்கள் என்று உணர்வீர்கள். பிறகு நீங்கள் யார் என்று
அறிந்து கொள்வீர்கள்.
உங்களுக்கு எல்லா பிரச்சினைகளையும் தருவது உங்கள் மனம்தான் இல்லையா? ஞானத்தின்
மூலம் மனம் தூய்மையடைகிறது.தூய்மையடைந்த மனதில் தெய்வீகம் பிரதிபலிக்கிறது.தானம்
நம் செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது. உங்கள் வருமானத்தில் ஒன்றிலிருந்து 3% சதவீதம்
வரை சமுதாயத்திற்காக செலவிடுங்கள். முடிந்தவர்கள் இன்னும் அதிகமாகவும் தானத்திற்காக
செலவிடலாம்.
செலவிடலாம்.
கேள்வி: குருஜி, ஆசை, கோபம், பேராசை, பந்தம், கர்வம், பொறாமை என்னும் மனதின் ஆறு
எதிரிகளை எப்படி வெல்வது?
நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லையென்றால் காமம் உண்டாகிறது. நீங்கள் நாள் முழுவதும்
வேலை செய்து கொண்டிருந்தால், இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றாது. நீங்கள்
சோர்வாக திரும்பி வந்து தூங்கி விடுவீர்கள். உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியம்
இருந்தால் சின்ன சின்ன ஆசைகள் உங்களைத் தொந்திரவு செய்யாது. பேராசையும் மேலும்
சோர்வாக திரும்பி வந்து தூங்கி விடுவீர்கள். உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இலட்சியம்
இருந்தால் சின்ன சின்ன ஆசைகள் உங்களைத் தொந்திரவு செய்யாது. பேராசையும் மேலும்
சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் உங்களை தொந்திரவு செய்தால், மிகப்பெரிய ஆசையான
தெய்வீகத்திற்கு பேராசைப்படுங்கள்.
தெய்வீகத்திற்கு பேராசைப்படுங்கள்.
அநியாயத்தை எதிர்த்து கோபப்படுங்கள்.சிறு விஷயங்களை விட்டு விட்டு மிகப்பெரிய விஷயங்
களுக்காக கோபப்படுங்கள்.இறைவன் உங்களுக்குச் சொந்தமானவன் என்று கர்வம் கொள்ளுங்கள்.
சேவை செய்வதில் பொறாமை கொள்ளுங்கள்.மற்றவர்களைவிட அதிகமாக சேவை செய்யுங்கள்.
யாராவது நற்குணங்களும் தாராள மனப்பான்மையும் கொண்டிருந்தால் நீங்கள் அவர்களை விட
அதிகமாக நற்குணங்களும் தாராள மனப்பான்மையும் கொண்டிருங்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக
மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.பிராணாயாமம் மூலம் எல்லா கெட்ட குணங்களும் வெளியற்றப்
சேவை செய்வதில் பொறாமை கொள்ளுங்கள்.மற்றவர்களைவிட அதிகமாக சேவை செய்யுங்கள்.
யாராவது நற்குணங்களும் தாராள மனப்பான்மையும் கொண்டிருந்தால் நீங்கள் அவர்களை விட
அதிகமாக நற்குணங்களும் தாராள மனப்பான்மையும் கொண்டிருங்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக
மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.பிராணாயாமம் மூலம் எல்லா கெட்ட குணங்களும் வெளியற்றப்
படுகின்றது. தவங்களில் எல்லாம் மிகப்பெரிய தவம் பிரனாயாமம்தான்
கேள்வி: குருஜி,உலகிலிருந்து விரோதத்தை அன்பை கொடுத்து நீக்க முடியும்,ஆனால் விரோதி
யை அன்புடன் நேசிப்பது எப்படி சாத்தியம்?
ஸ்ரீ ஸ்ரீ: முதலில் அவர்களுக்கு அன்பை கொடுக்க முயற்சிக்காதீர்கள். அவர்களை முதலில் ஏற்று கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுப்பது ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒரு கெடுதலை செய்தி
ருகிறார்கள், சரியா? அவர்கள் செய்த காரியத்தை நீங்கள் வெறுப்பதால் தான் அவர்களை நீங்கள்
வெறுப்பது. நீங்கள் ஒருவரை வெறுப்பதன் காரணம் அவர் ஒரு திருடனாகவோ, பொய்
சொல்பவனாகவோ அல்லது ஏமாற்றுகாரனகவோ இருக்க வேண்டும். பொய் சொல்வது,ஏமாற்றுவது
என்பதெல்லாம் ஒருவரின் செயல்பாடு. மனிதர்கள் அவர்களின் செயல்பாட்டை விட(வேறுபட்டவர்கள்) உயர்ந்தவர்கள். செயல்பாடு என்பது ஒரு வீட்டின் கூரையை போலவே அதுவே ஒரு வீடாகாது. நீங்கள் ஒருவரை வீட்டிற்கு இணையாக யோசித்தால் செயல்பாடு என்பது ஒரு வீட்டின் முகப்பாகும்.
வீடென்பது பெரியது. நீங்கள் வீடு முகப்பில் இருக்கிறதாக நினைக்க வேண்டாம்.
நீங்கள் ஒருவரை வெறுப்பது அவர்கள் செய்யும் செயலினால் தான்.செயல்களை திருத்தி கொள்ள
முடியும், சரியா? அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு.
நீங்கள் காரணத்தை பற்றி சிந்தித்தீர்கள் என்றால்-ஏன் அத்தகைய தீய செயல்கள் நடக்கின்றன, ஏன்
என்பதெல்லாம் ஒருவரின் செயல்பாடு. மனிதர்கள் அவர்களின் செயல்பாட்டை விட(வேறுபட்டவர்கள்) உயர்ந்தவர்கள். செயல்பாடு என்பது ஒரு வீட்டின் கூரையை போலவே அதுவே ஒரு வீடாகாது. நீங்கள் ஒருவரை வீட்டிற்கு இணையாக யோசித்தால் செயல்பாடு என்பது ஒரு வீட்டின் முகப்பாகும்.
வீடென்பது பெரியது. நீங்கள் வீடு முகப்பில் இருக்கிறதாக நினைக்க வேண்டாம்.
நீங்கள் ஒருவரை வெறுப்பது அவர்கள் செய்யும் செயலினால் தான்.செயல்களை திருத்தி கொள்ள
முடியும், சரியா? அவர் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் உண்டு.
நீங்கள் காரணத்தை பற்றி சிந்தித்தீர்கள் என்றால்-ஏன் அத்தகைய தீய செயல்கள் நடக்கின்றன, ஏன்
ஒருவர் கெட்ட காரியங்களை செய்கிறார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. முதல்
காரணம் அறியாமை. இரண்டாவது அவர்கள் காயபட்டிருகிரர்கள் அல்லது பாதிக்கபட்டிருபார்கள்
அவர்களுக்குள் வலி இருக்கிறது,அதனால் அவர்களால் வலியை தான் கொடுக்க முடியும்.உங்களிடம்
அன்பு இருந்தால் அன்பை கொடுப்பீர்கள்.நீங்கள் ஆனந்தத்தில் மிதந்து இருந்தால்,ஆனந்தத்தை
தருவீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்கமுடியும்.உங்களை ஒருவர்
காயபடுத்தினால் அவர் மிகவும்காயபட்டிருப்பவர் என்று பொருள்.அவர்கள் கஷ்டபடுபவர்கள் அல்லது அறியாமைகாரர்கள் –
காரணம் அறியாமை. இரண்டாவது அவர்கள் காயபட்டிருகிரர்கள் அல்லது பாதிக்கபட்டிருபார்கள்
அவர்களுக்குள் வலி இருக்கிறது,அதனால் அவர்களால் வலியை தான் கொடுக்க முடியும்.உங்களிடம்
அன்பு இருந்தால் அன்பை கொடுப்பீர்கள்.நீங்கள் ஆனந்தத்தில் மிதந்து இருந்தால்,ஆனந்தத்தை
தருவீர்கள். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுக்கமுடியும்.உங்களை ஒருவர்
காயபடுத்தினால் அவர் மிகவும்காயபட்டிருப்பவர் என்று பொருள்.அவர்கள் கஷ்டபடுபவர்கள் அல்லது அறியாமைகாரர்கள் –
அவர்களுக்கு கற்று தர யாரும் இல்லை. நீங்கள் இதை அறிந்தால் இரக்கபடுவீர்கள்.ஒரு குழந்தை
தவறு செய்தால் நீங்கள் அந்த குழந்தையை காரணமாக சொல்வீர்களா? இல்லை,"அது ஒரு
குழந்தை என்றும் அது அறியாமையால் செய்தது என்றும் கூறுவீர்கள் அல்லவா அது பூஞ்சாடியை உடைத்தாலும் சரி கண்ணாடியை உடைத்தாலும் சரி"நீங்கள் இந்த செயலை பெரியமனதாகவும்,
இரக்கமுடனும் காணுவீர்கள்.
நீங்கள் யாரிடம் வெறுப்பை காண்பிகிறீர்களோ நீங்கள் அவரை உங்களுக்கு சரி சமமானவர்களாக அல்லது புத்திசாலிகளாக நினைகிறீர்கள். அதனால் தான் நீங்கள் அவர்களிடம் வெறுப்பை காண்பி கிரீர்கள். நீங்கள் அவர்களை பெரியமனதுடன் கண்டீர்களானால் அவர்கள் அறியாமைகாரர்கள்,
அல்லது உடம்பு முடியாதவர்கள் அல்லது அவதிபடுபவர்களாக இருப்பார்கள். எப்படி உடம்பு
முடியாதவர்களை அல்லது அறியாமைக்காரர்களை நாம் வெறுப்பது? நாம் நடைமுறையில்
முடியாதவர்களை அல்லது அறியாமைக்காரர்களை நாம் வெறுப்பது? நாம் நடைமுறையில்
என்ன செய்வோம்? நாம் அவர்கள் மீது இரக்கம் கொள்வோம். அவர்களுக்கு முதற்கட்டமாக
அன்பை கொடுக்காதீர்கள். ஆகையால் நீங்கள் பரந்த நோக்குடன் பார்க்கும் பொழுது உங்களுக்கு
அவர்களிடம் இரக்கம் பிறக்கும். இந்த இரக்கம் உச்ச நிலையை அடையும் பொழுதுஅது அன்பாக
மாறுகிறது.நீங்கள் இரண்டு அடியாக எடுத்து வைக்கவேண்டும். இரண்டாவது அடியை முதலில்
எடுக்காதீர்கள்.
அன்பை கொடுக்காதீர்கள். ஆகையால் நீங்கள் பரந்த நோக்குடன் பார்க்கும் பொழுது உங்களுக்கு
அவர்களிடம் இரக்கம் பிறக்கும். இந்த இரக்கம் உச்ச நிலையை அடையும் பொழுதுஅது அன்பாக
மாறுகிறது.நீங்கள் இரண்டு அடியாக எடுத்து வைக்கவேண்டும். இரண்டாவது அடியை முதலில்
எடுக்காதீர்கள்.
கேள்வி: குருஜி,நான் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். சில மாணவர்கள் நான் பார்வை
குறைபாடு உடையவர் என்று என்னிடம் சலுகை எடுத்துக்கொள்கிறார்கள் நான் பாடம் நடத்தும்
போது வகுப்பில் பேசியோ,உணவு சாப்பிட்டோ செய்கிறார்கள்.நான் அவர்களை எவ்வாறு கட்டுபடுத்துவது?
ஸ்ரீ ஸ்ரீ: முதலில் நீங்கள் பார்வை குறைபாடு உடையவர் என்பதால் தான் செய்கிறார்கள் என்று
எண்ணக்கூடாது. பார்வையுள்ள ஆசிரியர்களுக்கும் இந்த சங்கடம் உள்ளது. உண்மையாகப்
பார்த்தால் அவர்கள் உங்களிடம் மென்மையாக இருக்கிறார்கள்.மற்ற ஆசிரியர்களுக்கும்,
பேராசிரியர்களுக்கும் இதை விட பெரிய கஷ்டங்கள் இருக்கின்றன.அவர்கள் மேல் தக்காளிப்
பழத்தையடித்த அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.ஆசிரியராக ,உங்களுக்கு பொறுமையும், நகைச்சுவை உணர்வும் தேவைlநகைச்சுவையால் நிலைமையை மாற்றலாம்.
பேராசிரியர்களுக்கும் இதை விட பெரிய கஷ்டங்கள் இருக்கின்றன.அவர்கள் மேல் தக்காளிப்
பழத்தையடித்த அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.ஆசிரியராக ,உங்களுக்கு பொறுமையும், நகைச்சுவை உணர்வும் தேவைlநகைச்சுவையால் நிலைமையை மாற்றலாம்.
கேள்வி: குருஜி ,எனக்குத்தெரிந்த இரண்டு பேர் மதுரை அருகிலுள்ள கோவிலுக்கு சென்று
ஓலை சுவடிகள் படிக்கச் சென்றார்கள் .அவர்கள் எந்த விதமான சாதனாவும் செய்வதில்லை
என்று எனக்கு தெரியும் .அவர்கள் ஆன்மிக நாட்டம் உள்ளவர்களும் இல்லை. அவர்களுக்கு
இது தான் கடைசிப் பிறவி என்று சொல்லப்பட்டிருக்கு அவர்களோடு என்னை ஒப்பிட்டு
பார்க்கையில் ,நான் சாதனா முதலியன செய்தும்,பழைய கால சுவடுகள்) அபிப்ராயம், சபலம்
முதலியவற்றால் திணறி க்கொண்டிருக்கிறேன் ஒரு மனிதன் தன்னுடைய கடைசி பிறவி
யிலும் கூட சாதனா செய்யாமல் வாழ்க்கை நடத்த முடியுமா ?
முதலியவற்றால் திணறி க்கொண்டிருக்கிறேன் ஒரு மனிதன் தன்னுடைய கடைசி பிறவி
யிலும் கூட சாதனா செய்யாமல் வாழ்க்கை நடத்த முடியுமா ?
ஸ்ரீ ஸ்ரீ::முதலில் உங்களை அவர்களோடு ஒப்பிடாதீர்கள் .சில சமயங்களில் இந்த பலன்கள் 100% சரியாக இருப்பதில்லை .60 அல்லது 70% தான் இந்த முன் உணர்ந்து கூறுதல் உண்மையாக இருக்கும். பக்தர்களைக் கவருவதற்கு இவ்வாறு இது தான் கடைசி பிறவி சாதனா செய் என்பார்கள். பெரியவர்கள் கூட இது தான் கடைசி சந்தர்ப்பம் சாதனா செய் என்பார்கள் சொல்லு வதற்கு ஒரு முறை இருக்கு .ஆனால் நீங்கள் ஒப்பிடாதீர்கள் .சரியா? இன்னொன்று ஒருவர்
எப்பொழுது சாதனா செய்ய ஆரம்பிப்பார்கள் ,எவ்வளவு முன்பே செய்திருக்கிறார்கள் என்று
உங்களுக்குத் தெரியாது அதனால் வாழ்க்கை அளவிடமுடியாதது.,தொடர்ந்து சென்றுகொண்டிருப்பது. உங்களை எவ்வளவு உயர்ந்திருக்கிறீர்கள் என்பது தான் சிறந்தது.நீங்கள் நன்கு வளர்ந்திருக்கிரீர்கள். அதை பார்த்து தன்னம்பிகையோடு முன்னேறுங்கள.உங்களுக்கும் கடைசி பிறவி உண்டு, நாம் திரும்பவும் வர வேண்டுமென்றால் வர வேண்டியது தான்.அதனால் என்ன? அறிவோடு சென்றால், அறிவோடு திரும்புவீர்கள்,கஷ்டத்துடன் சென்றால் கஷ்டத்துடன் திரும்புவீர்கள் .இதுதான் உண்மை .
உங்களுக்குத் தெரியாது அதனால் வாழ்க்கை அளவிடமுடியாதது.,தொடர்ந்து சென்றுகொண்டிருப்பது. உங்களை எவ்வளவு உயர்ந்திருக்கிறீர்கள் என்பது தான் சிறந்தது.நீங்கள் நன்கு வளர்ந்திருக்கிரீர்கள். அதை பார்த்து தன்னம்பிகையோடு முன்னேறுங்கள.உங்களுக்கும் கடைசி பிறவி உண்டு, நாம் திரும்பவும் வர வேண்டுமென்றால் வர வேண்டியது தான்.அதனால் என்ன? அறிவோடு சென்றால், அறிவோடு திரும்புவீர்கள்,கஷ்டத்துடன் சென்றால் கஷ்டத்துடன் திரும்புவீர்கள் .இதுதான் உண்மை .
கேள்வி: பரீட்சையின்போது நரம்பு தளர்ச்சியை எப்படி சமாளிக்கலாம் ?
ஸ்ரீ ஸ்ரீ::உஜ்ஜை மூச்சு விடுங்கள் .ப்ராணாயமும் ,உஜ்ஜை மூச்சும் உதவும் .அல்லது "ஒம் நம சிவாய
ஜெய் குருதேவ் " என்று உச்சாடனம் செய்யுங்கள் .
கேள்வி: ஏன் இந்த இருப்பு (அண்டசராசரங்கள்) இருக்கு ?
ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இந்த கேள்வியை கேட்பதற்கும் நான் பதில் சொல்வதற்கும் .(சிரிப்பு )ஏன் இருக்க க்கூடாது? இது மிகவும் நல்லது. இந்த கேள்வியை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் .ஒரு நாள்
இதன் விடையை கண்டுபிடிப்பீர்கள் .அப்பொழுது என்னிடம் வந்து சொல்லுங்கள் அது சரியா தவறா
என்று நான் சொல்வேன்..
கேள்வி: பேச்சுவழக்கில் ,சத்யம் ,அசத்தியம் என்றால் என்ன?நாம் உண்மையே பேசுவேன் என்று உறுதிமொழி எடுக்கும் போது, அதன் பொருள் என்ன ?
ஸ்ரீ ஸ்ரீ: உங்களுக்கு, உண்மையாகவும்,சத்தியமாகவும் இருங்கள்.இது தான். உங்களுடைய மனச்சாட்சி ஒன்றை செய்யவேண்டாம் என்றால் அதை செய்யாதீர்கள். செய்யவேண்டும் என்றால்
அதை செய்யுங்கள். நீங்கள் ஒரு பொய் சொன்னால் ,உங்கள் உடல் முழுதும் வலிமையை இழக்கிறது. அதனால் தான் ,"உண்மை பேசு,நன்மை பயக்கக்கூடிய உண்மை பேசு,தீமையை
உண்டாக்கும் உண்மையைப் பேசாதே,இனிமையான பொய் பேசாதே "என்று சொல்லப்பட்டிருக்கு.
இது தான் முந்தைய சனாதன தர்மம். இந்த இரட்டை வரிகளை யார் எழுதியது என்று தெரியாது.
இவை சுபாஷிடா " என்ற பொன் வார்த்தைகள்.விலை மதிக்க முடியாத இரட்டை வரிகள் .இது
மாதிரியானவை ஆயிரத்திற்கும் மேல் பழமையான காலத்திலிருந்து உள்ளன .இவை முந்தைய
பாடபுஸ்தகங்களில் இருந்தன .இப்பொழுது அவை நீக்கப்பட்டு விட்டன .இதை மீண்டும் நடை
முறைக்குக்கொண்டு வரவேண்டும் .
கேள்வி: கோவில்களில் கைகூப்பி நிற்கும் நாகதேவதைகள் எவ்வாறு ஆசி வழங்கும் ?
ஸ்ரீ ஸ்ரீ:: கடவுள்களிலும்,தேவதைகளிலும் பல நிலைகள் உள்ளன .அவர்கள் எல்லோரும் சிவனை துதிக்கின்றனர். சில கோவில்களில் ஹனுமார் கைகூப்பி இருப்பதை நீங்கள்
பார்த்திருக்கலாம்.சில இடத்தில் ஆசீர்வாதம் செய்வதுபோல் கை உயர்த்தி இருக்கும் .
கேள்வி:குருஜி ,காதல் கொள்வது எளிதாகவும்,அதில் தொடர்ந்து நீடித்திர்ருப்பதும்,
கடினமாகவும் உள்ளது ?
ஸ்ரீ ஸ்ரீ:பந்தத்தால் பிடித்துக்கொள்ளப்பட்டிருக்கிர்கள் .காதல் வயப்பட்டு நீங்கள் போலீச்காரராக மாறுகிறிர்கள்.சின்ன சின்ன விஷயங்களிலும் துப்பரிபவன்போல் மூக்கை நுழைக்கிறீர்கள் .
உங்களுக்கு பரந்த நோக்கம், உயரிய குறிக்கோள் ,நிரம்பவும் வேலை ஆகியன இருந்தால், நீங்கள் காதல் வயப்படும்
போது அதை நீண்டகாலம் கடைப்பிடிக்கமுடியும் .
கேள்வி: நமக்கு அப்பாற்பட்டிருக்கும் இயற்கையை நாம் எவ்வாறு நமக்குள்ளே எடுத்து செல்ல முடியும்? இயற்கைக்கும் ,ஆன்மிகத்திற்கும் உள்ள தொடர்பைப்ப்றி விரிவாக சொல்லுங்கள் ?
ஸ்ரீ ஸ்ரீ: இது தான் " லய சமாதி"நீங்கள் ஆகாயத்தை தொடர்ந்து நோக்கிக்கொண்டே இருந்து ,
சில நேரம் கழித்து உங்கள் கண்களை மூடிக்கொண்டால் ,வெளி ஆகாயமும் உள்ளிருப்பதை
உணர்வீர்கள் .நீங்கள் கருமையை உணர்வீர்கள்.அதுபோல் சூரியன் மறையும் போது நிறைய
நேரம் பார்க்க முடியாது .சிறிது நேரம் பார்த்து கண்ணை மூடினால் மனம் அமைதியாகவும்
நிசப்தமாகவும் ஆகும் .
நிசப்தமாகவும் ஆகும் .
கேள்வி: குருஜி,சமஸ்க்ரிதம் இயற்கையிலிருந்து தோன்றியதாக சொல்கிறார்கள்.எதனால் அதற்க்கு
இவ்வளவு மதிப்பு? ஏன் எல்லா பழைய புத்தகங்களும் இம்மொழியிலே எழுதப்பட்டிருக்கின்றன?இன்றைய சூழ்நிலைக்கு இது ஓவ்வுமா?
ஸ்ரீ ஸ்ரீ: ஆம் .போன வாரம் நியூஜீலாந்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு சமஸ்க்ரிதத்தை ஆரம்பித்தார்கள.
அவர்கள் அதன் பின் கம்ப்யூட்டர் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டார்கள்.சமஸ்க்ரிதம்
கம்ப்யூட்டர் கல்விக்கு சிறந்தது .அது நரம்புமொழி மாற்றங்களை மூளைக்கு ஏற்படுத்துகிறது. அதனால் அது மிகவும் நல்லது .
கேள்வி: குருஜி! மகாபாரதத்தில் கிருஷ்ணனின் ரதத்தில் ஹனுமான் சின்னத்தின் முக்யத்துவம் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ : தற்போது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கொடி இருப்பது போல அக்காலத்தில்
ரதத்தில் ஒரு கொடி உபயோகிப்பது வழக்கம். காங்கிரஸ் கட்சி கை சின்னம், மற்றொரு கட்சி தாமரை மலர் சின்னம் என்று உபயோகிப்பது போல் கிருஷ்ணன் தன் ரதத்திற்கு அனுமன் சின்னத்தை
உபயோகித்தார். ஹனுமன் சின்னம் வெற்றியை குறிப்பதாகும். கிருஷ்ணனின் எல்லா முயற்சிகளும்
வெற்றி என்பதால் இந்த சின்னத்தை தேர்ந்தெடுத்தார்.முந்தைய யுகத்தில் ராமர் இலங்கை மன்னன்
ராவணனுடன் போர் புரிந்தார். ராமனின் படையில் குரங்குகளும், குறைந்த எண்ணிக்கை வீரர்களுமே
இருந்தனர். இலங்கை மன்னனின் படை மிகுந்த பலம் வாய்ந்தது. இலங்கை செல்வச்செழிப்புள்ள நாடு.
அங்கு வீடுகளின் கூரைகள் தங்கத்தால் வேயபட்டிருந்தன. வீட்டுத் தூண்களில் விலைஉயர்ந்த ரத்ன
கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. இலங்கை ஒருதங்க நகரம். ராமர் இலங்கையை கண்டு " ஒ ! இது வியத்தகு
நகரம். ஆயினும் நான் என் தாய் நாட்டுக்கே திரும்ப விரும்புகிறேன்! அது சுவர்க்கத்திலும் மேலானது’
என்றார் ராமர் இலங்கையை வெற்றிகண்டு, இந்தியாவிற்கே திரும்பினார்.
ஆக, வலுவற்ற நிலையிலும் வெற்றி என்பதையே ஹனுமான் எனும் சின்னம் எடுத்துக் காட்டுகிறது. வலுவற்ற தோற்றமாயினும் அதிக ஆன்மிக பலம் முக்கியம் என்பதின் முக்யத்துவம் ஹனுமான்
சின்னம். பாண்டவர் ஐந்து பேர், ஆனால் கௌரவர் நூறு பேர்.சரிசம விகிதம் கூட இல்லாத போர்.
ஆகவே, அர்ஜுனனுக்கு, தார்மீக, நெறிமுறை உணர்வு பலம் தருவதற்காக,ஹனுமான் சின்ன
கொடியை உபயோகிக்குமாறு கிருஷ்ணன் கூறினார். ராமபடை சாதித்ததை நீயும் சாதிக்கலாம் என்று
கூறினார்.
கேள்வி: குருஜி! திருமணம் என்பது உறவா அல்லது பந்தமா? அது உறவென்றால் ஏன் பந்தம் போல்
கட்டுப்படுத்துகிறது? பந்தமென்றால் அதை எவ்வாறு உறவாக்குவது?
ஸ்ரீ ஸ்ரீ: எப்படி நீங்கள் அதை அணுகுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. ஒருவரை ஒருவர்
மென்னியை பிடித்துக்கொண்டால் அது தளை. ஒருவரோடொருவர் கைகோர்த்து நடந்தால் அது உறவு
ஒருவருக்கொருவர் ஆதரவுடன் இருங்கள்.ஒருவருக்கொருவர் வாழ்கை துணையாக இருங்கள்.
உலகில் எவ்வளவோபேர் திருமணம் புரிந்து தோழமையுடன் இருக்கிறார்கள். இணைப்பகுதி உணர்வு
இல்லையெனில் திருமண உறவு தளையாகிவிடும். அதனால் தான் கணவனும் மனைவியும் ஒத்த
குறிக்கோளுடன் இருக்கவேண்டும்.அக்குறிக்கோள் மிக ஸ்ரேஷ்டமானதாக இருந்தால் , அவர்கள்
மனம் அக்குறிக்கோளை அடைவதில் ஒன்றாக ஈடுபடும்; அவர்கள் உறவும் பலப்படும்.
கேள்வி: குருஜி! சிலசமயம்,நம்மை சுற்றி இருப்பவர் முக்கியமாக,வயதில் பெரியவர்கள் ஜாதி
போன்ற சமூக கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வந்து சிந்திக்க மறுக்கிறார்களே? அது அவர்களுக்கு நன்மை ஆனாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே? அந்த சூழலை எவ்வாறு
கையாள்வது?
கையாள்வது?
ஸ்ரீ ஸ்ரீ: மெதுவாக அவர்களை உணர வையுங்கள். பற்றுறுதி ஊட்டுங்கள். அவர்கள் எவ்வளவு
உறுதியாக இருக்கிறார்கள், நீங்கள் எந்த அளவு சிரமங்களை மேற்கொள்ளமுடியும் என்பதையும்
நீங்கள் கவனிக்க வேண்டும். ஏதோ ஒரு நிலையில் சமரசம் ஏற்படுவது நல்லது. அவர்களை
சமரச நிலைக்கு கொண்டு வருவது , அல்லது அது இயலவில்லையென்றால் நீங்கள் சிறு தியாகம்
செய்து சமரசத்தை ஏற்படுத்துவது நல்லது. இரண்டு பக்கமும் பிடிவாதமாக இருந்தால் பிரச்சினை
ஏற்படும். அப்படி ஒரு சிரமம் நிகழ்ந்தாலும் பின்னர் நன்மை ஏற்படும் என்று கருதினால் வேறு
வழியில்லை , நீங்கள் பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள்.
கேள்வி: குருஜி! எனது பேரன் , பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோருக்கு பெற்றோர் மற்றும் பாட்டன்
பாட்டி இருக்கிறார்களா என்று கேட்கிறான்.அந்த குழந்தையின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது?
ஸ்ரீ ஸ்ரீ:அவனுக்கு இந்த பதிலை கூறுங்கள்: விஷ்ணுவின் நாபி வழியே பிரம்மா தோன்றியதால்
விஷ்ணுவே பிரம்மாவின் தகப்பன்.விஷ்ணு சக்தி சிவனிடமிருந்தும்,சிவன் ஒளி இடமிருந்தும்
தோன்றியதாகவும் கூறுங்கள். பேரனிடம் ஒரு டென்னிஸ் பந்தை கொடுத்து அதன் ஆரம்பம் முடிவு
இவற்றை கண்டு பிடிக்கசொல்லுங்கள். சிறு குழந்தைகள் இப்படித்தான் புரிந்துகொள்ளுவார்கள்.
கேள்வி: குருஜி! தவறு என்று தெரிந்தே தவறு செய்கிறோம். மீண்டும் அதே தவறை செய்கிறோம்.
தவறுகள் பல செய்தாலும் கடவுள் கருணையுடன் இருக்கிறாரே? ஏன்?
ஸ்ரீ ஸ்ரீ:‘ மௌனம் ஒரு கொண்டாட்டம்’ ‘ அன்பு ஒரு கொண்டாட்டம் ‘ என்கிற இரு புத்தகங்களில்
இவற்றை பற்றி விரிவாக கூறியிருக்கிறேன் , படியுங்கள்.
கேள்வி: குருஜி! நான் உத்தரப்ரதேசத்தில் இருந்து வந்துள்ளேன். அங்கு எல்லா இடங்களிலும் தேர்தல்
சண்டைகள் உள்ளன. சைக்கிளில் (ஒரு கட்சியின் சின்னம்)காற்று தளர்ந்து விட்டது. யானை (ஒரு கட்சியின் சின்னம்) எங்களை மிதிக்க விரும்புகிறது.கை ((ஒரு கட்சியின் சின்னம்) எங்கள் குரல்
வளையை நெரிக்கப்பார்கிறது. தாமரை (ஒரு கட்சியின் சின்னம்) மலரவே இல்லை.இந்த நிலையில்
என்னை போன்ற ஒரு சாமானியன் என்ன செய்ய வேண்டும்? யாருக்கு ஒட்டளித்தாலும் எனக்கு
பிரச்சினைதான்.
ஸ்ரீ ஸ்ரீ: நானும் இதையேதான் யோசித்துக்கொண்டிருந்தேன்.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு
ஒரு தீர்வு காண்போம். நாம் என்ன செய்யவேண்டும்? நாம் ஒன்றாக சேர்ந்து யோசிப்போம்.
இப்போதைக்கு ஒட்டு அளியுங்கள். கட்சியை பார்க்காமல் அந்த சின்னத்தின் வேட்பாளர் நல்லவரா
என்று பாருங்கள். வேட்பாளருக்கு குற்றப்பதிவு குறிப்பு எதுவும் இல்லையானால் அவருக்கு ஓட்டளியுங்கள்.வாக்களிக்காமல் மட்டும் இருக்காதீர்கள். இந்த தடவை இவ்வாறு செய்யுங்கள்,
அடுத்த முறை வேறு யுக்தி ஏதாவது நாம் கண்டுபிடிக்கலாம்.(சிரிப்பு). நல்லவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நாடு முன்னேறும்.
கேள்வி: குருஜி!:இப்புவியில் பிறந்த ஒவ்வொறுவரும் ஒரு குறிப்பான பங்காற்ற பிறந்தனரா?
ஒவ்வொருவருக்கும் பிறப்பின் நோக்கம், பங்கு இருக்கிறதா? விழிப்புணர்வு(ஆத்மா )தான் பிறப்பிற்கு முன்பே அந்நோக்கம் தீர்மானிக்கப்படுகிறதா?
ஸ்ரீ ஸ்ரீ: ஆம்! மிக சரி !!ஒவ்வொரு வாழ்கையும் ஒரு நோக்கத்துடன் கூடியது.ஒரு புல் கூட பயனின்றி இருப்பதில்லை. அந்தந்த நோக்கம் சரியான சமயத்தில் வெளிப்படும். நீங்கள் உங்கள் கடமையை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களை வெறுமையாகவும் காலியாகவும் வைத்துக் கொள்ளுங்கள். தியானமும் சேவையும் உங்களை மிகச்சரியாக நடத்திச்செல்லும்.
கேள்வி: குருஜி! எல்லாமே மாறிக்கொண்டிருப்பதால் எதுவும் ஒரே நிலையில் இருப்பதில்லை.
வாழ்வின் நோக்கமும் மாறுமா?
ஸ்ரீ ஸ்ரீ: ஆம். மாற்றம் சாத்தியமானது தான்.